Thursday, 18 December 2014

தாக்கங்கள் ........

                     தாக்கங்கள் ........

நினைத்த கணத்தில் நெஞ்சை துளைக்கும் கூர் வாட்கள்

திரும்பி பார்க்க வைக்கும்  இளம் பிராயத்து  இனிமை கணங்கள்
இன்றும் ஏக்கத்தோடு இமை நனைக்கும் வர்ண ஜாலங்கள்

ஆற்றாமையுடன் கண் நோக்காமல் நிரந்தரமாய் பிரிந்த வலிகள்
அவ்வப்போது ஆழ் மனதில் எட்டி பார்த்த மின் பிம்பங்கள்

அகவைகள் உருண்டோடினாலும் வடுக்களில் ஒளிந்திருக்கும் ரணங்கள்
அடிக்கடி மனம் தவிக்க வைக்கும்  நினைவின் குருதி புனல்கள்

ஏன், எப்படி, எதனால், விடை காண இயலாத வினாக்கள்
கால சக்கரம் களிப்புடன் ஆட்டுவித்த  பொம்மலாட்டங்கள்

எப்படி தேற்றினாலும் மனம் உரசி செல்லும் ஏமாற்றங்கள்
இந்த நிமிடம் மட்டுமே நிரந்தரம் இடித்துரைக்கும் இயல்புநிலைகள் .........

No comments:

Post a Comment