Thursday, 18 December 2014

வாழ்க்கை பயணப் பாதையில்.....

                 வாழ்க்கை பயணப் பாதையில்.....

சில மனிதர்கள் கரும்பலகையின் வெண் பலப்பங்கல்
சில உறவுகள் குலை தள்ளும் வாழைகள்


சில சந்திப்புகள் ரயில் சிநேகங்கள்
சில முகவரிகள் கசங்கி போன நாட்குறிப்புகள்


சில பந்தங்கள் வலி தரும் நெருஞ்சி முட்கள்
சில காட்சிகள் பசுமரத்து ஆணிகள்


சில அனுபவங்கள் ஏகலைவன் பாடங்கள்
சில காதல்கள் நீறு பூத்த நெருப்புகள்


சில நினைவுகள் கனவில் உயிர் பெரும் சிலைகள்
சில நிஜங்கள் ஆறா ரணம் தரும் மனக்கீறல்கள்


சில வலிகள் பள்ளி செல்ல அடம்பிடிக்கும் மழலையின் கைப்பிடிகள்
சில ஆச்சர்யங்கள் மொட்டுக்கள் மலராகும் அபூர்வ தருணங்கள்


சில நேசங்கள் மட்டுமே ஆழ்மன புரிதலின் நேர் அலை வரிசைகள்
சமச்சீராய் மனம் புத்தி  கையாளும் ரசமானிகள்
தகிக்கும் சுட்டெரிக்கும் பாலைவனத்தின் சோலைகள்
மாலைவேளையில் மனம் வருடி செல்லும் மலைய மாருதங்கள்
நினைத்தவுடன் இதழ்கடை தோற்றுவிக்கும் புன்னகை பூக்கள்


அந்நேசத்தை பெற்றவர் அதிர்ஷ்டசாலி...
அதை தொடர்பவர் பாக்கியசாலி .....

No comments:

Post a Comment