Thursday, 18 December 2014

யார் சொன்னார் காதற் பெண்ணிற் கடைக்கண் பட்டு விட்டால்....


கூதிர் காலம் குளும் பனி
நெடிலிரவு குறில் பகல்


இரவு பணி நிறைவு
நிலவின் மனத் தவிப்பு
அளவில்லா ஆசை காதல் ஏக்கம்
மனக் குமுறல் விசும்பல் கேவல்
இன்றும் நெடும் காத்திருப்பா?
இந்த ஆண்களே இப்படித்தானா?


எங்கும் நிசப்தம் ஏகாந்தம்
அண்டத்தின் தவ மோனம்
கீழ் வானில் மெல்லிய வர்ணஜாலம்
நிலவின் கண்ணில் அதீத நிறை ஒளி
வந்தான் வசீகர புன்னகை பகலவன் !!


வா அன்பே! நெடு நேரம் காத்திருப்பா?
இல்லை அன்பரே இமை பொழுது தான்
கண்ணோடு கண்ணோக்கும் சொற்ப நாழிகை
வரவா சென்று வரவா? ........
செல்லத் தான் வேணுமா ?.......


சொல்லொனா பிரிவில் தின உதயம்!!

No comments:

Post a Comment